முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்ஸ் உப்புமா / oats uppuma

தேவையானவை:
ஓட்ஸ் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2 கீறியது
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி துருவியது - 1 டீஸ்பூன்


தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு பின்ச்

செய்முறை:

  • ஓட்ஸ்-ஐ ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாசனை வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

  • பின்பு வறுத்து வைத்த ஓட்ஸ், தேவையான உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • ஓட்ஸ் நன்கு வெந்ததும், எலுமிச்சை சாறை கலந்து இறக்கவும்.

  • சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.
  • இதனை சூடாக பரிமாறவும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறால் கிரேவி / Prawn gravy

தேவையானவை: இறால் - 1/4 கிலோ குடமிளகாய் - 2 காளான் - 5 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 1 இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் மிளகாய்த்தூள் - 1 tsp தனியாத்தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 5 tsp சோம்பு - 1/2 tsp பிரிஞ்சி இலை - 1 அன்னாசி பூ - 1 செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும். அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம்...

சிக்கன் பிரியாணி / chicken biriyani

தேவையானவை: சிக்கன் - 1/4 கிலோ பாசுமதி அரிசி - 1 கப் (160 ml) வெங்காயம் - 1 தக்காளி - 1 or 1/2 தயிர் - 2 tsp இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் பிரியாணி மசாலா தூள் - 1 tsp மிளகாய் தூள் - 1/4 tsp கரம் மசாலா தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு தாளிக்க: நெய் - 5 tsp பட்டை - 1 லவங்கம் - 3 பிரிஞ்சி இலை - 1 சோம்பு - 1/4 tsp முந்திரி - 5 செய்முறை: வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். பாசுமதி அரிசியை களைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும். சிக்கன் லெக் எடுத்துள்ளேன். இஷ்டம் போல போன்லெஸ் சிக்கன் கூட எடுத்து கொள்ளலாம். சிக்கனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் (பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ) உப்பு சேர்த்து 10 நிமிஷம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கி கொள்ளவ...

மசாலா தூள் (masala powder)

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி (தனியா) - கால் கிலோ மிளகாய் வற்றல் - கால் கிலோ விரலி மஞ்சள் - 10 சீரகம் - 50 கிராம் மிளகு - 50 கிராம் சோம்பு - 25 கிராம் பெருங்காயம் - 15 கிராம் வெந்தயம் - 10 கிராம் அரிசி - அரை கப் பட்டை - 5 கறி மசால் இலை - 5 செய்முறை: மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு நாள் வெயிலில் நன்றாக காய வைத்து வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக வறுத்து மெஷினில் குடுத்து அரைக்கவும். இவற்றை வீட்டிலேயே மிக்சியிலும் அரைக்கலாம். ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எடுத்து வறுத்து அரைத்து காற்று புகா பாட்டிலில் போட்டு உபயோகபடுத்தலாம்.  மணமும் அபாரமா இருக்கும். இதனை அனைத்து வகையான குழம்பு, சாம்பார், கூட்டு, பொரியல் வகைகள் செய்ய பயன்படுத்தலாம்.