முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறால் கிரேவி / Prawn gravy


தேவையானவை:
இறால் - 1/4 கிலோ
குடமிளகாய் - 2
காளான் - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 tsp
தனியாத்தூள் - 2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் - 5 tsp
சோம்பு - 1/2 tsp
பிரிஞ்சி இலை - 1
அன்னாசி பூ - 1

செய்முறை:
  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும்.

  • அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கவும்.

  • சுவையான இறால் கிரேவி ரெடி.

  • இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு அருமையான காம்பினேசன்.

கருத்துகள்

  1. பாக்கியா இறால் கிரேவி போட்டு அசத்திட்டிங்க போங்க .....கண்டிப்பா நானும் இதே மாதிரி செய்து பார்க்கணும் ...

    பதிலளிநீக்கு
  2. Vithiyasama iruku.
    mushroomlam pottu..naanum oru naa try paniparkiraen...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிக்கன் பிரியாணி / chicken biriyani

தேவையானவை: சிக்கன் - 1/4 கிலோ பாசுமதி அரிசி - 1 கப் (160 ml) வெங்காயம் - 1 தக்காளி - 1 or 1/2 தயிர் - 2 tsp இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் பிரியாணி மசாலா தூள் - 1 tsp மிளகாய் தூள் - 1/4 tsp கரம் மசாலா தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு தாளிக்க: நெய் - 5 tsp பட்டை - 1 லவங்கம் - 3 பிரிஞ்சி இலை - 1 சோம்பு - 1/4 tsp முந்திரி - 5 செய்முறை: வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். பாசுமதி அரிசியை களைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும். சிக்கன் லெக் எடுத்துள்ளேன். இஷ்டம் போல போன்லெஸ் சிக்கன் கூட எடுத்து கொள்ளலாம். சிக்கனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் (பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ) உப்பு சேர்த்து 10 நிமிஷம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கி கொள்ளவ...

ரசமலாய் / rasamalai

தேவையானவை: பால் - 1/2 கப்  சர்க்கரை - 1/2 கப்  எலுமிச்சை ஜூஸ் - 1 tsp அலங்கரிக்க: பாதாம் பருப்பு - 1 பிஸ்தா பருப்பு - 1 குங்கும பூ - 4 இதழ்கள்  பனீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த) பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும். சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும். அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும். இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும். பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது. ரசமலாய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும். இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது ரசகுல்லவை சிறிது அழுத்தினால்...