முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறால் கிரேவி / Prawn gravy


தேவையானவை:
இறால் - 1/4 கிலோ
குடமிளகாய் - 2
காளான் - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 tsp
தனியாத்தூள் - 2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் - 5 tsp
சோம்பு - 1/2 tsp
பிரிஞ்சி இலை - 1
அன்னாசி பூ - 1

செய்முறை:
  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும்.

  • அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கவும்.

  • சுவையான இறால் கிரேவி ரெடி.

  • இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு அருமையான காம்பினேசன்.

கருத்துகள்

  1. பாக்கியா இறால் கிரேவி போட்டு அசத்திட்டிங்க போங்க .....கண்டிப்பா நானும் இதே மாதிரி செய்து பார்க்கணும் ...

    பதிலளிநீக்கு
  2. Vithiyasama iruku.
    mushroomlam pottu..naanum oru naa try paniparkiraen...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்பைசி மீன் குழம்பு / spicy fish kuzhambu

தேவையானவை: மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 புளி - 1 எலுமிச்சை அளவு வெள்ளை எள்ளு - 2 tsp தேங்காய் - 1 பத்தை பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 tsp தனியா தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp சீரக தூள் - 1/4 tsp சோம்பு தூள் - 1/2 tsp தாளிக்க: நல்லெண்ணெய் - 3 tsp கடுகு - 1/2 tsp சீரகம் - 1 tsp வெந்தயம் - 1 tsp பெருங்காயம் - 1 பின்ச் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை: மீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி மீண்டும் ஒரு முறை கழுவி வைக்கவும். இது மீனின் வாடையை போக்கும். எள்ளு மற்றும் வெங்காயத்தை சிறிது எண்ணையில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதனுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்பொழுது அரைத்த விழுது, புளிதண்ணீர், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை நீங்கியவுடன் சுத்தம் செய்த மீனை போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வெந்த பின் இறக்கவ

ரசமலாய் / rasamalai

தேவையானவை: பால் - 1/2 கப்  சர்க்கரை - 1/2 கப்  எலுமிச்சை ஜூஸ் - 1 tsp அலங்கரிக்க: பாதாம் பருப்பு - 1 பிஸ்தா பருப்பு - 1 குங்கும பூ - 4 இதழ்கள்  பனீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த) பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும். சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும். அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும். இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும். பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது. ரசமலாய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும். இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது ரசகுல்லவை சிறிது அழுத்தினால் தண்ணீர் மட்டு

நெய் பருப்பு (ghee dal)

தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - ஒரு பின்ச் செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும். சுவையான நெய் பருப்பு ரெடி. குறிப்பு: இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.  குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை. இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.